Published : 06 May 2024 06:26 AM
Last Updated : 06 May 2024 06:26 AM

ஹைதராபாத்தில் ரூ.23 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

கோப்புபடம்

ஹைதராபாத்: ரகசிய தகவலின் பேரில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை பறக்கும் படையைச் சேர்ந்த தேர்தல் அதிகாரிகள் ஹைதராபாத் விமான நிலையம் அருகேவாகன சோதனை செய்தனர்.

அப்போது, 2 கார்களில் கொண்டு சென்ற 34.78 கிலோ தங்க நகை, 43.60 கிலோ வெள்ளி பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.23 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று சவுட்டேப்பல் அருகே போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, 5.96 கிலோ தங்க பிஸ்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்புரூ.4.31 கோடி என கூறப்படுகிறது. இவையும் வருமான வரித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x