Published : 05 May 2024 06:51 AM
Last Updated : 05 May 2024 06:51 AM

அமித் ஷா மார்பிங் வீடியோ தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகி அருண் ரெட்டி கைது

அருண் ரெட்டி

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் மாற்றி வெளியிட்ட விவகாரத்தில் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஹைதராபாத்தில் கடந்த மாதம் 23-ம் தேதி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசிய வீடியோவை ஏஐ தொழில்நுட்பத்தில் மாற்றி, அவர் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு எதிராக பேசியது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது.

இது தொடர்பாக ஹைதரா பாத்தில் காங்கிரஸ் சமூக வலைதள குழுவைச் சேர்ந்த 5 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த போலி வீடியோ தயாரிப்பில் தொடர்புடைய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள ஒருங்கிணைப்பாளர் அருண் ரெட்டியை டெல்லி போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இவர் ‘ஸ்பிரிட் ஆஃப் காங்கிரஸ்’ என்ற பெயரில் எக்ஸ் தளத்தில் கணக்கு வைத்துள்ளார். இதை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். அமித் ஷாவின் போலி வீடியோவை இவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

முதல்வருக்கு சம்மன்: போலி வீடியோவை பகிர்ந்தது தொடர்பாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கும்,இதர மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் டெல்லி போலீஸார்சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்த வீடியோவை வெளி யிட்டதில் தனக்கு சம்பந்தம் இல்லை என ரேவந்த் ரெட்டியின் வழக்கறிஞர் டெல்லி போலீஸில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x