Published : 05 May 2024 07:28 AM
Last Updated : 05 May 2024 07:28 AM

வேட்பாளர்களுக்கு 48 மணி நேரத்துக்குள் ‘நோ டியூஸ்' சான்றிதழ்

புதுடெல்லி: மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வரி அல்லது கட்டண நிலுவைஎதுவும் இல்லை (நோ டியூஸ்) என்பதற்கான சான்றிதழ் கேட்டு வேட்பாளர்கள் விண்ணப்பித்தால், அடுத்த 48 மணி நேரத்துக்குள் அதனை சம்பந்தப்பட்ட துறைகள் அல்லது அதிகாரிகள் வழங்க வேண்டும். நிலுவை வைத்திருக்கும் ஒருவர் நிலுவைத் தொகையை செலுத்த முன்வரும்போது, அவருக்கு விண்ணப்பித்த 24 மணி நேரத்துக்குள் ‘நோ டியூஸ்’ சான்றிதழ் வழங்க வேண்டும்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவுடன் படிவம் 26-ல் உறுதிச்சான்று அளிக்க வேண்டும். இது முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x