ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் விதிகளுக்கு புறம்பாக பகிரங்க தபால் வாக்கு பதிவு

தபால் வாக்கு செலுத்த வரிசையில் காத்திருந்த அரசு ஊழியர்கள்
தபால் வாக்கு செலுத்த வரிசையில் காத்திருந்த அரசு ஊழியர்கள்
Updated on
1 min read

ஸ்ரீகாகுளம்: ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் நேற்று தேர்தல் விதிகளுக்குப் புறம்பாக அரசு ஊழியர்கள் கும்பலாக நின்று தாபால் வாக்குகளை செலுத்தினர்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 13-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தல் பணியில் ஈடுபட்ட உள்ள அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குப் பதிவு நேற்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது.

இதில், ஸ்ரீகாகுளம் மாவட்டம், நரசண்ண பேட்டையில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த வாக்கு பதிவை நடத்தும் அதிகாரிகள் தாமதமாக காலை 9.30 மணிக்கு வந்தனர். அதன் பின்னரே தபால் வாக்குப் பதிவுகள் தொடங்கப்பட்டதால், பலர் முண்டியடித்துக் கொண்டு வாக்குச் சாவடியில் குவிந்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மேலும், வாக்குப் பதிவின் போதும் பலர் அருகருகே நின்றுகொண்டு பகிரங்கமாக வாக்குகளை பதிவு செய்தனர். இது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என அங்குள்ள சிலர் கண்டித்தும் அதனை யாரும் பொருட்படுத்தவில்லை,

இதற்கிடையில் இந்த இடத்தை தெரிந்து கொண்டு, அங்கு ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரம் செய்தனர். இதனை போலீஸாரும் கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in