Published : 04 May 2024 10:05 AM
Last Updated : 04 May 2024 10:05 AM

ஹைதராபாத்தில் உச்ச நீதிமன்ற கிளை: தெலங்கானா காங்கிரஸ் வாக்குறுதி

தெலங்கானாவில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 13-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தெலங்கானா மாநில காங்கிரஸ் சார்பில் தேர்தல் அறிக்கையை, கட்சியின் மேலிட பொறுப்பாளர் தீபாதாஸ் முன்ஷி நேற்று ஹைதராபாத்தில் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ஸ்ரீதர்பாபு பேசியதாவது: காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் மாநில பிரிவினை சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும்.

விளையாட்டு துறையை மேம்படுத்த ஹைதராபாத்தில் விளையாட்டு பல்கலைக்கழகம் அமைக்கப்படும். மேடாரம் பண்டிகைக்கு தேசிய அளவிலான அந்தஸ்து பெற்றுத் தரப்படும். உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு கிளையை ஹைதராபாத்தில் நிறுவ ஏற்பாடுகள் செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் ஸ்ரீதர்பாபு பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x