மேற்கு வங்கத்தில் இந்துக்களை 2-ம் தர குடிமக்களாக நடத்துவது ஏன்? - மோடி விமர்சனம்

மேற்கு வங்கம் நாடியா மாவட்டம்  கிருஷ்ணா நகர் தொகுதியில்  நேற்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற  பிரதமர் மோடி, அத்தொகுதி பாஜக வேட்பாளர் அம்ரிதா ராய்க்கு வாழ்த்து தெரிவித்தார். 
| படம்: பிடிஐ |
மேற்கு வங்கம் நாடியா மாவட்டம் கிருஷ்ணா நகர் தொகுதியில் நேற்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, அத்தொகுதி பாஜக வேட்பாளர் அம்ரிதா ராய்க்கு வாழ்த்து தெரிவித்தார். | படம்: பிடிஐ |
Updated on
1 min read

மேற்கு வங்கத்தின் பர்தாமன், துர்காபூர் மற்றும் கிருஷ்ணா நகர் பகுதியில் பிரதமர் மோடி நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் அரசு ஊழலிலும், வாக்கு வங்கிகளை திருப்திபடுத்தும் அரசியலிலும் ஈடுபடுகிறது.

சந்தேஷ்காலி கிராமத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் அரசு இரக்கம் காட்டவில்லை. அங்கு பெண்களுக்கு எதிராக பல கொடுமைகள் நடந்துள்ளன. குற்றவாளிகள் தண்டிக்க வேண்டும் என நாடே விரும்பியது.

குற்றவாளியின் பெயர் ஷாஜகான் ஷேக் என்பதால் அவர் மீது திரிணமூல் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்காமல், கடைசி வரை பாதுகாத்தது. திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஹுமாயுன் கபிர் என்பவர், ‘‘இந்துக்களை பாகீரதி ஆற்றில் தூக்கி எறியுங்கள்’’ என கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் இந்துக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவது ஏன்? இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in