Published : 30 Apr 2024 06:15 AM
Last Updated : 30 Apr 2024 06:15 AM

‘370 தொகுதியில் வெற்றி’ - நிர்மலா சீதாராமன் நம்பிக்கை

விசாகப்பட்டினம்: ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசியதாவது:

வரும் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த (விகிசித் பாரத்) நாடாக்க பிரதமர் உறுதி பூண்டுள்ளார். இதற்கு நிலையான அரசு அமைய வேண்டியது அவசியம். மேலும் இந்த இலக்கை எட்டுவதில் இளைஞர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

செயற்கை நுண்ணறிவு திட்டத்தை மேம்படுத்துவதில் நம் நாடு முதலிடம் வகிக்கிறது. வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 370 தொகுதிகள் கிடைக்கும். பாஜக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். இவ்வாறு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x