Last Updated : 09 Apr, 2018 08:30 AM

 

Published : 09 Apr 2018 08:30 AM
Last Updated : 09 Apr 2018 08:30 AM

515 ஐபிஎஸ் அதிகாரிகள் சொத்து விவரம் தரவில்லை: நோட்டீஸ் அனுப்ப மத்திய அரசு உத்தரவு

கடந்த 2016-ம் ஆண்டுக்கான அசையா சொத்து விவரங்களை 515 ஐபிஎஸ் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. இதையடுத்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அனைத்து இந்திய பணிகள் (நடத்தை) விதிகள் 1968-ன்படி, அனைத்து ஐபிஎஸ் அதிகாரிகளும் தங்களுடைய அசையா சொத்து விவரங்களை (ஐபிஆர்) உரிய படிவத்தில் ஆண்டுதோறும் ஜனவரி 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், 2017 மார்ச் 31 நிலவரப்படி மொத்தம் உள்ள 3,905 ஐபிஎஸ் அதிகாரிகளில் 3,390 பேர் மட்டுமே 2016-ம் ஆண்டுக்கான ஐபிஆர் சமர்ப்பித்துள்ளனர். ஆனால், டிஜிபி, ஏடிஜிபி மற்றும் ஐஜிபி உள்ளிட்ட உயர் பதவிகளை வகிப்பவர்கள் உட்பட மொத்தம் 515 பேர் ஐபிஆர் தாக்கல் செய்யவில்லை.

இதையடுத்து, ஐபிஆர் தாக்கல் செய்யாத அனைத்து ஐபிஎஸ் அதிகாரிகளிடமும் விளக்கம் கேட்குமாறு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. முறையான காரணம் இல்லாமல் ஐபிஆர் தாக்கல் செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு மறுக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x