Published : 23 Apr 2024 05:19 AM
Last Updated : 23 Apr 2024 05:19 AM

ஜம்மு காஷ்மீரில் 9 இடங்களில் என்ஐஏ சோதனை

கோப்புப்படம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் அனந்தநாக் மாவட்டம் கோகர்நாக் பகுதியில் நடந்த என்கவுன்ட்டரில் கடந்த 2023 செப்டம்பரில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை தரப்பில் ராணுவத்தை சேர்ந்த மேஜர், கர்னல், ஒரு வீரர் மற்றும் காஷ்மீர் போலீஸ் டிஎஸ்பி ஒருவர் வீரமரணம் அடைந்தனர்.

இந்த வழக்கு விசாரணை பிறகு என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் சந்தேக நபர்கள்தொடர்புடைய 9 இடங்களில் என்ஐஏ நேற்று சோதனை நடத்தியது. கோகர்நாக் என்கவுன்ட்டர் வழக்கில் 2 பேருக்கு எதிராக என்ஐஏகுற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு ஸ்ரீநகரில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சந்தேக நபர்கள் லஷ்கர்-இ-தொய்பாவின் கிளையான ‘தி ரெசிஸ்டன்ட் பிரன்ட்’ அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x