Last Updated : 25 Apr, 2018 09:41 AM

 

Published : 25 Apr 2018 09:41 AM
Last Updated : 25 Apr 2018 09:41 AM

மகாராஷ்டிராவில் நடந்த மோதலில்; பலியான மாவோயிஸ்ட் எண்ணிக்கை 37 ஆக உயர்வு

மகாராஷ்டிர மாநிலத்தில் 2 நாட்களில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் பலியான மாவோயிஸ்ட்கள் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது.

கட்சிரோலி மாவட்ட வனப்பகுதியில் மாவோயிஸ்ட் அமைப்பினர் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் சி-60 கமாண்டோ படை வீரர்கள் கடந்த 22-ம் தேதி தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இதையடுத்து அப்பகுதியிலிருந்து 16 மாவோயிஸ்ட்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில் அதே பகுதியில் நேற்று மேலும் 15 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இத்துடன் பலியானோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.

அதே மாவட்டத்தைச் சேர்ந்த கப்வஞ்சா பகுதியில் 23-ம் தேதி பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 6 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். இத்துடன் 2 நாட்களாக நடந்த துப்பாக்கிச் சண்டையில் மொத்தம் 37 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x