Published : 01 Apr 2018 10:27 AM
Last Updated : 01 Apr 2018 10:27 AM

சிபிஎஸ்இ வினாத்தாள் கசிந்த விவகாரம்: பயிற்சி மைய இயக்குநர்கள், 4 மாணவர்கள் கைது

மத்திய இடைநிலை பள்ளிக்கல்வி வாரிய (சிபிஎஸ்இ) தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தில் பயிற்சி மைய இயக்குநர்கள் 2 பேர் மற்றும் 4 மாணவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வுக்கான கணிதம் மற்றும் 12-ம் வகுப்புக்கான பொருளாதாரம் ஆகிய வினாத்தாள்கள் டெல்லி உள்ளிட்ட சில வட மாநிலங்களில் முன்கூட்டியே வெளியானது. இதைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, ஜார்க்கண்ட் மாநிலத்தில் 10 வகுப்பு மாணவர்கள் 6 பேரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா நகரில் உள்ள தனியார் பயிற்சி மையத்தின் இயக்குநர்கள் 2 பேர் மற்றும் 4 மாணவர்களை கைது செய்துள்ளதாக போலீஸார் நேற்று தெரிவித்தனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x