Published : 03 Apr 2018 08:03 AM
Last Updated : 03 Apr 2018 08:03 AM
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு விதிக்கப்பட்ட தடையை வரும் 27-ம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
ஐஎன்எக்ஸ் மீடியாவின் ரூ.305 கோடி சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ ஏற்கெனவே கைது செய்தது. அவர் இப்போது ஜாமீனில் உள்ளார். இதே குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத் துறையும் கார்த்தி சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பியது. அவரைக் கைது செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது. ஏற்கெனவே, ஏப்.2 (நேற்று) வரை கார்த்தி சிதம்பரத்தை கைது தடை விதிக்கப்பட்டது. நேற்று இந்த தடையை வரும் 27ம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT