Published : 21 Aug 2014 08:27 AM
Last Updated : 21 Aug 2014 08:27 AM
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியிருப்ப தால்,இனி வழக்கிற்கு தடை விதிக்கக் கோரும் பேச்சுக்கே இடமில்லை என கர்நாடக உயர் நீதிமன்றம் தெரி வித்துள்ளது.
பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 32 தனியார் நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ், ஆஞ்சநேயா பிரிண்ட்டர்ஸ் உள்ளிட்ட 10 தனியார் நிறுவனங்கள் சார்பாக கடந்த மே மாதம் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதனால் 10 தனியார் நிறுவனங்கள் சார்பாகவும் கடந்த மே மாதம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இம்மனு நீதிபதி அரவிந்தகுமார்முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்த போது தனியார் நிறுவனங்களின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள், ''ஜெயலலிதா,சசிகலா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் எங்களுடைய நிறுவனங் களுக்கும், நால்வருக்கும் நேரடி தொடர்பில்லை.அவர்கள் எங்க ளுடைய நிறுவனங்களில் பங்குதாரராகவே இருந்தனர். ஆதலால் எங்களுடைய நிறுவனங் களை வழக்கில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும். அதுவரை பெங்களூர் சிறப்புநீதிமன்றத்தில் நடை பெற்றுவரும் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்''என கோரிக்கை விடுத்தனர்.
தடை கிடையாது
இதனைத் தொடர்ந்து நீதிபதி அரவிந்தகுமார் பேசும்போது, ‘‘சொத் துக்குவிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தற்போதைய சூழலில் அந்த வழக் கிற்கு தடைவிதிக்கக் கோரும் பேச்சுக்கே இடமில்லை. இனியும் இது போன்ற மனுக்களை தாக்கல் செய்து, நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கக் கூடாது. மேலும் உங்களுடைய மனு (தனியார் நிறுவனங்கள்) தொடர்பாக அரசு வழக்கறிஞரின் வாதத்தை பதிவு செய்ய வேண்டும்.ஆதலால் இம்மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை வருகிற 25-ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறேன்''என்றார்.
சுதாகரன், இளவரசி தரப்பு வாதம்
இதனிடையே பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் சொத்துக்குவிப்பு வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கில் மூன்றாம் மற்றும் நான்காம் குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சுதாகரன், இளவரசியின் வழக்கறிஞர் அமித் தேசாய் ஆஜரானார். அவர் 5-வது நாளாக தங்களுடைய தரப்பு இறுதி வாதத்தை தொடர்ந்தார். சுதாகரன், இளவரசி தரப்பு இறுதி வாதம் வியாழக்கிழமையும் தொடரவுள்ளது.
ஜெ.கூட்டுச்சதி தொடர்பான மனுவிற்கு இறுதியில் தீர்ப்பு
ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் சார்பாகவும் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட கூட்டுசதி தொடர்பான மனு மீது தீர்ப்பு புதன்கிழமை வெளி யாகும் என அறிவிக்கப்பட்டது.இது தொடர்பாக நீதிபதி டி'குன்ஹா பேசும் போது, ‘‘1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெய லலிதா சசிகலா,சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருடன் சேர்ந்து கூட்டு சதியில் ஈடுபட்டாரா? என்பது குறித்த மனு மீதான தீர்ப்பு, சொ0னத்து குவிப்பு வழக்கின் இறுதி தீர்ப்பு வெளியாவதற்கு முன்பாக வெளியிடப்படும்''என காலவரையின்றி தீர்ப்பை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT