Last Updated : 21 Feb, 2018 11:37 AM

 

Published : 21 Feb 2018 11:37 AM
Last Updated : 21 Feb 2018 11:37 AM

ஒடிசா முதலவர் நவீன் பட் நாயக் மீது செருப்பு வீச்சு

ஒடிசா முதல்வர் நவீன் பட் நாயக் அம் மாநில இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிக் கொண்டிருந்தபோது அவர் மீது செருப்பு வீசப்பட்டது.

ஒடிசாவில் பெஜ்பூர் தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற 24 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து ஆளும் கட்சியான பிஜூ ஜனதா தளம் சார்பில் முதல்வர் நவீன் பட் நாயக் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பெஜ்பூரில் செவ்வாய்க்கிழமை மாலை நடந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்று தொண்டர்களுக்கிடையே நவீன் பட்நாயக் உரையாற்றினார்.

அப்போது அங்கிருந்த நபர் அடுத்தடுத்து இரண்டு செருப்புகளை அடித்தடுத்து அவர் மீது வீசினார். எனினும் பாதுகாவலர்கள் நவீன் பட் நாயக்கை மீட்டனர். செருப்பு வீசிய நபரை பிஜூ ஜனதா தளம் தொண்டர்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைந்தனர்.

செருப்பு வீசிய நபர் யாரென்று இதுவரை தெரியப்படுத்தவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x