Published : 16 Feb 2018 07:42 AM
Last Updated : 16 Feb 2018 07:42 AM

பிரதமரிடம் பல முறை பேசியும் நியாயம் கிடைக்கவில்லை: சந்திரபாபு நாயுடு வேதனை

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கக் கோரி பிரதமரிடம் பல முறை பேசியும் நியாயம் கிடைக்கவில்லை என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேசக் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் அமராவதியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

மத்திய பட்ஜெட்டில் அனைத்து மாநிலங்களைப் போலவேதான் ஆந்திராவுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவுக்கான சிறப்பு நிதியை வழங்கக் கோரி 29 முறை டெல்லி சென்றேன். அங்கு பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பலரை சந்தித்துப் பேசிவிட்டேன். ஆனால், நமக்கு நியாயம் கிடைக்கவில்லை.

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற விவகாரங்களில் மத்திய அரசுக்கு துணை நின்றோம். ஆனால், மாநிலப் பிரிவினையால் நஷ்டம் அடைந்த ஆந்திராவை கண்டுகொள்ளாதது வேதனையளிக்கிறது. எனினும் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே, மத்திய அரசுடனான கூட்டணியை தெலுங்கு தேசம் தொடர்கிறது. இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x