Published : 12 Feb 2018 10:00 AM
Last Updated : 12 Feb 2018 10:00 AM
முன்னாள் ராணுவ அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஏ.கே.அந்தோணி கேரள மாநிலம் கொச்சியில் நேற்று கூறும்போது, “ராணுவத்துக்கு 36 ரபேல் போர் விமானங்களை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் மூலம் இந்தியா வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் குறித்து மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, விமான விலை உட்பட இந்த ஒப்பந்தம் குறித்த முழு விவரங்களையும் மத்திய அரசு வெளியிட வேண்டும். எந்த அடிப்படையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது என்பதையும் தெரிவிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT