Published : 22 Feb 2018 07:25 AM
Last Updated : 22 Feb 2018 07:25 AM

நேருக்கு நேர் 2 கார் மோதல்: தெலங்கானாவில் 9 பேர் பலி

தெலங்கானாவில் நேற்று 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

ஹைதராபாத்திலிருந்து நேற்று காலை கர்னூல் நோக்கி கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. வனபர்த்தி மாவட்டம், கனிமெட்டு என்ற இடத்தில் சென்றபோது, கார் நிலை தடுமாறி தடுப்பு சுவர் மீது மோதியது. பின்னர் எதிரில் ஹைதராபாத் நோக்கி வந்து கொண்டிருந்த கார் மீதும் மோதியது. இந்த விபத்தில் மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர்.காயமடைந்த 4 பேரை மகபூப் நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. இதில் 3 பேர் பெண்கள்.

இதுகுறித்து வனபர்த்தி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x