தமிழக பெண்ணின் பாதம் தொட்டு வணங்கிய பிரதமர் மோடி

தமிழக பெண்ணின் பாதம் தொட்டு வணங்கிய பிரதமர் மோடி
Updated on
1 min read

டெல்லியில் சிறந்த கதை சொல்லிபிரிவுக்கான விருது பெறுவதற்காக தமிழ்நாட்டை சேர்ந்தகீர்த்திகா கோவிந்தசாமி மேடைஏறியதும் பிரதமர் மோடியின் பாதத்தை தொட்டு வணங்கினார். அப்போது பிரதமர் மோடி, காலில் விழக்கூடாது என்றுஅறிவுறுத்தினார். அதேநேரம் கீர்த்திகாவின் பாதத்தை அவர் 3 முறை தொட்டு வணங்கினார். பின்னர் விழா மேடையில் இருவரின் உரையாடல் விவரம்:

பிரதமர் மோடி: நாட்டில் பாதங்களை தொட்டு வணங்குவது பாரம்பரியாக இருக்கிறது. கலைத் துறையில் ஒருவர் காலில் விழும்போது, அதன் உணர்வு வேறுபட்டதாக இருக்கும். ஒரு மகள் (கீர்த்திகா கோவிந்தசாமி) என் பாதம் தொட்டு வணங்கும்போது எனது மனம் பாதிப்படையும்.

கீர்த்திகா : மிக்க நன்றி ஐயா.

பிரதமர் மோடி: நீங்கள் பேசுவதை கேட்க விரும்புகிறேன்.

கீர்த்திகா: என்னை மன்னிக்க வேண்டுகிறேன். நான் இந்தியை புரிந்து கொள்வேன். ஆனால் இந்தியில் சரளமாக பேச முடியாது.

பிரதமர் மோடி: உங்களுக்கு விருப்பமான மொழியிலேயே பேசுங்கள். இந்த நாடு மிகப் பெரியது. ஏதோ ஓர் இடத்தில் நீங்கள் பேசுவதை கேட்பவர் இருப்பார்.

கீர்த்திகா: எல்லோருக்கும் வணக்கம். பல மேடைகளில் தமிழை பெருமைப்படுத்திய பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் மோடி: ‘வணக்கம்' என்று தமிழில் கூறி எனது உரையைத் தொடங்குவேன்.

நீங்கள் வரலாற்றில் இருந்துஒரு பகுதியை எடுத்து பேசுகிறீர்கள். நீங்கள் பணியாற்றுவது சவாலான ஒரு களம். உங்கள் உணர்வு எப்படி இருக்கிறது.

கீர்த்திகா: வரலாறும் அரசியலும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. இது கொஞ்சம் சவாலான பணிதான். பலர் எதிர்மறையாக விமர்சிக்கின்றனர்.

பிரதமர் மோடி: இளம் தலைமுறையினர்தான் செல்போனில்அதிக நேரத்தை செலவிடுகின்றனர். இளம் தலைமுறையினரின் விருப்பம் என்னவாக இருக்கிறது?

கீர்த்திகா: எனது பார்வையாளர்களில் பலர் இளம் தலைமுறையினர். இந்தியாவின் வரலாறு, பெருமைகளை எடுத்துக் கூறும்கதைகளை விரும்புகின்றனர்.

பிரதமர் மோடி: உங்கள் கதைகளால் இளம் தலைமுறையினருக்கு நன்மைகள் கிடைக்கும். நீங்கள் நாட்டுக்கு மிகப்பெரிய சேவை செய்கிறீர்கள். நன்றி. வாழ்த்துகள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in