Published : 02 Feb 2018 08:59 AM
Last Updated : 02 Feb 2018 08:59 AM
2017-18-ம் நிதியாண்டில் நாட்டின் ஏற்றுமதியானது 15 சதவீதம் அதிகரிக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் அவர் கூறியதாவது:
2015-16-ம் நிதியாண்டில் நமது நாட்டின் ஏற்றுமதி 262.39 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. 2016-17-ம் ஆண்டில் 264.64 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி வளர்ச்சி பெற்றது. இது 2017-18-ம் ஆண்டில் 15 சதவீதம் அதிகரிக்கும். ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. நடப்பாண்டில் ஏற்றுமதி நல்ல வளர்ச்சியைப் பெறும் என்று எதிர்பார்க்கிறோம். வரும் நிதி ஆண்டிலும் ஏற்றுமதியை அதிகரிக்க அக்கறை செலுத்துவோம். ஏற்றுமதியை ஊக்குவிக்க ரூ.8.450 கோடி ஊக்கத்தொகையை மத்திய அரசு அறிவித்திருந்தது என்றார். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT