Published : 10 Feb 2018 07:42 AM
Last Updated : 10 Feb 2018 07:42 AM

3 மக்களவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

உத்தரபிரதேசத்தில் கோரக்பூர், புல்பூர் மக்களவை தொகுதிகளிலும் பிஹாரில் அராரியா மக்களவை தொகுதிக்கும் மார்ச் 11-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இத்துடன் பிஹாரில் பபுவா, ஜெகனாபாத் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

உ.பி.யில் முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோர் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததால் கோரக்பூர், புல்பூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. பிஹாரில் ஆர்ஜேடி எம்.பி. முகம்மது தஸ்லிமுதீன் மறைவால் அராரியா மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x