Published : 12 Feb 2018 10:02 AM
Last Updated : 12 Feb 2018 10:02 AM
ஊழல் செய்வதில் கர்நாடக பாஜக உலக சாதனையை முறியடித்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல், 2-வது நாளான நேற்று கொப்பலில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியதாவது:
கர்நாடகாவில் கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது ஒரு ஊழல் புகார் கூட இல்லை. ஆனால் இங்கு பாஜக ஆட்சி நடைபெற்றபோது ஒன்றன் பின் ஒன்றாக பல்வேறு ஊழல்கள் நடைபெற்றன.
இதனால் 3 முறை முதல்வர்கள் மாற்றப்பட்டனர். மேலும் 4 அமைச்சர்கள் ஊழல் புகாரில் சிக்கி சிறை சென்றனர். அந்த வகையில் ஊழல் செய்வதில் கர்நாடக பாஜக உலக சாதனையை முறியடித்துவிட்டது. இதை மறந்துவிட்டு அவர்கள் எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர்.
எனவே, வரும் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் இப்போது நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகளை தொடர முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT