டெல்லி நேரு ஸ்டேடியம் அருகே பந்தல் சரிந்து விபத்து: 8 பேர் காயம்

டெல்லி நேரு ஸ்டேடியம் அருகே பந்தல் சரிந்து விபத்து: 8 பேர் காயம்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் அருகே அமைக்கப்பட்ட தற்காலிக பந்தல் சனிக்கிழமை சரிந்து விழுந்த விபத்தில் 8 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து, நேரு விளையாட்டு மைதானத்தின் இரண்டாவது வாயில் அருகே நடந்துள்ளது. அங்கு மேடைக்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் டெல்லி போலீஸார், தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தில் 8 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்து டெல்லி தெற்கு டிசிபி அன்கித் சவுகான் கூறுகையில், "இந்த விபத்து முற்பகல் 11 மணிக்கு நடந்துள்ளது. நேரு விளையாட்டு அரங்கத்தின் இரண்டாவது கேட் பகுதியில் தயார் நிலையில் இருந்த பந்தல் சரிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

தற்போது வரை எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை. போலீஸ், தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டனர்" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in