Published : 27 Feb 2018 07:54 AM
Last Updated : 27 Feb 2018 07:54 AM

திரிணமூல் காங்.கட்சியிலிருந்து பூட்டியா விலகல்

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாய்சுங் பூட்டியா திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து நேற்று விலகினார்.

இது தொடர்பாக அவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் விலகுகிறேன். வேறு எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினராக சேரும் எண்ணம் இல்லை” என பதிவிட்டுள்ளார்.

கடந்த 2014 மக்களவை தேர்தலின்போது, திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்த பூட்டியா, டார்ஜிலிங் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2016 சட்டப்பேரவை தேர்தலில் சிலிகுரி தொகுதியில் போட்டியிட்டு தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. - ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x