Published : 07 Feb 2018 07:05 AM
Last Updated : 07 Feb 2018 07:05 AM

நாகாலாந்தில் 8 எம்எல்ஏக்கள் திடீர் ராஜினாமா

நாகாலாந்தில் ஆளும் நாகா மக்கள் முன்னணிக் கட்சியிலிருந்து 2 எம்எல்ஏக்கள் மற்றும் 6 சுயேச்சை எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை நேற்று ராஜினாமா செய்தனர்.

நாகாலாந்தில் தேர்தல் நெருங்கும் சமயத்தில், நாகா மக்கள் முன்னணிக் கட்சியில் இருந்து எம்எல்ஏக்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருவது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படு கிறது.

நாகாலாந்தில் முதல்வர் டி.ஆர்.ஜேலியாங் தலைமையிலான நாகா மக்கள் முன்னணிக் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் 60 உறுப்பினர்களைக் கொண்ட நாகாலாந்து சட்டப்பேரவைக்கு, வரும் 27-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில், நாகா மக்கள் முன்னணிக்கு எதிராக, தேசிய ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிடுகிறது.

இந்நிலையில், ஆளும் நாகா மக்கள் முன்னணிக் கட்சியிலிருந்து ஏராளமான எம்எல்ஏக்கள் விலகி, தேசிய ஜனநாயகக் கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், நாகா மக்கள் முன்னணிக் கட்சியைச் சேர்ந்த கைட்டோ அய் மற்றும் நெய்பிரேஸோ கெடிட்ஸு ஆகிய 2 எம்எல்ஏக்கள் நேற்று தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அதேபோல், 6 சுயேச்சை எம்எல்ஏக்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தேசிய ஜனநாயகக் கட்சியில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x