மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு

மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
Updated on
1 min read

கொல்கத்தா: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டது குறித்து மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா நேற்று கூறியதாவது:

அச்சுறுத்தல் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். என்னையும் சிறையில் அடைத்தால் எப்படியாவது அதிலிருந்து வெளியே வந்துவிடுவேன். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அனைவரும் சிறைக்கு அனுப்பப்படுகின்றனர். வெற்றுப்பாத்திரங்கள் தான் அதிக ஒலியை எழுப்பும். இன்று அவர்கள் அதிகாரத்தில் உள்ளனர். நாளை அவர்கள் ஆட்சியில் இருக்க மாட்டார்கள். இவ்வாறு மம்தா கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in