

புதுடெல்லி: புதிய நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார்.
பட்ஜெட் தயாரிப்பு என்பது பல்வேறு துறை சார்ந்த வல்லுநர் மற்றும் அதிகாரிகளின் உழைப்பில் உருவாக்கப்படுவதாகும். நாட்டின் பொருளாதார பாதையை வடிவமைப்பதிலும், அரசின் நலத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதிலும் பட்ஜெட் தாக்கல் ஒரு முக்கியமான நிகழ்வாகும். நாட்டின் சாதாரண குடிமகன் முதல் தொழிலதிபர்கள் வரை பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்கள், சலுகைககள் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய பட்ஜெட் பல சுவாரஸ்யமான வரலாறுகளை உள்ளடக்கியது. அதுகுறித்து பார்க்கலாம்.