“தேர்வு பயத்திலிருந்து வெற்றிக்கு வித்திடுதல்” - மத்திய இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார்

“தேர்வு பயத்திலிருந்து வெற்றிக்கு வித்திடுதல்” - மத்திய இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார்
Updated on
2 min read

தே ர்வுகள் என்பது செங்குத்தான மலை உச்சியை நோக்கி பயணிப்பது போல் உணரக் கூடிய சவாலான கல்விச் சூழலில், மனஅழுத்தம் தவிர்க்க முடியாதது. எதிர்பார்ப்புகள் என்ற கனமான பையை முதுகில் சுமந்து கொண்டு ஏறுவது கடினமானதுதான். அதேசமயம், இந்தப் பயணத்தில் சக தோழர்களின் ஆதரவு, பயணத்தின் சுமையைக் குறைக்கும்.

படிப்படியாக, நண்பர்களுடன் ஒன்றாக மலை ஏறுவதைக் கற்பனை செய்து பாருங்கள். சவால்களை வென்றவர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்ட முடியும். இந்த நட்பும், ஆதரவும், கல்விச் சவால்களுடன் தொடர்புடைய மன அழுத்தத்தை வெகுவாகக் குறைக்கும்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது ‘எக்ஸாம் வாரியர்ஸ்' புத்தகத்தில், ஒவ்வொரு மாணவரையும் ஒரு போர் வீரராக இருங்கள், கவலைப்படுபவராக அல்ல என்று ஊக்குவிக்கிறார். ஒவ்வொரு மாணவரும் ஒரு போர்வீரனாக மாறி,கல்விச் சவால்களை வெல்லும்போது வெற்றி வெளிப்படுகிறது. இருப்பினும், இந்தப் பயணத்தின் மத்தியில், நமது சக வீரர்களில் சிலர் தேர்வுகளின் போது அதிக மன அழுத்தத்தையும் சிக்கல்களையும் எதிர்கொள்கின்றனர்.

ஒரு போர்வீரன் தனிப்பட்ட சவால்களைச் சமாளித்து, சக வீரர்களுக்கும் ஆதரவை வழங்குகிறான். இதுபோலவே, தேர்வுகளின்போது அருகருகே பயணிப்பது,பயணத்தின் மூலம் ஒருவருக்கொருவர் உதவுவது, சக வீரர்களுக்கு பயணத்தை எளிதாக்குவது ஆகி யவை ஒரு கூட்டு சக்திக்கு இன்றி யமையாத அம்சமாகும்.

தேர்வு மன அழுத்தத்தை சமாளிக்கும் வழிமுறைகள் மற்றும் உத்திகளை தோழர்கள் பகிர்ந்து கொள்வதால் மற்றவர்களின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வது ஒரு மதிப்புமிக்க பாடமாக மாறும். பள்ளி அல்லது கல்லூரியில் உள்ள மூத்தவர்கள், இதேபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொண்டவர்கள், வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுக்கான மதிப்புமிக்க ஆதாரங்களாக செயல்படுகிறார்கள்.

மேலும், குழப்பமும் பதற்ற மும் பெரும்பாலும் தெளிவான சிந்தனையைத் தடுக்கும் போது தேர்வுக்கு முந்தைய நாட்களில் சக தோழர்கள் வழங்கும் எண்ணங்களில் உள்ள தெளிவு குறிப்பாக மதிப்புமிக்கதாகிறது. மேலும், ஆதரவான சூழலை உருவாக்குவதற்கு கல்வி நிறுவனங்களின் கூட்டு முயற்சி தேவைப்படுகிறது. மன ஆரோக்கியமும், கல்வி வெற்றியும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதை அங்கீகரித்து, நிறுவனங்கள் தங்கள் மாணவர்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

மேலும், நிறுவனக் கட்டமைப்பில்தோழமை ஆதரவுத் திட்டங்களை ஒருங்கிணைப்பது மாணவர்களுக்கான ஆதரவின் அணுகலை மேம்படுத்து கிறது.

எனது இளம் நண்பர்கள் அனைவரும் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல், மற்றவர்களின் சாதனைகளுடன் தங்களை ஒப்பிட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

வேறொருவரின் பாதையைப் பின்பற்ற முயற்சிப்பது வழக்கமான வழியைப் பின் பற்றுவது போன்றது, அதற்குப் பதிலாக, குறைவாக பயணித்த சாலையைத் தேர்வுசெய்க. ஒரு சிறந்த இலக்கு, விருப்பம் மற்றும் உத்வேகத்தால் இயக்கப்படுகிறது, நிர்பந்தத்தால் அல்ல என்ற பிரதமர் மோடியின் ‘எக்ஸாம் வாரியர்ஸ்' மந்திரத்தின் ஞானத்தைப் பின்பற்றி,தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தாமல் நம்மை முன் னோக்கி செலுத்தும் குறிப்பிட்ட இலக்குகளை அமைப்போம்.

எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்த ஆண்டின் ‘தேர்வு குறித்த உரையாடல்' பதிப்பை நாடு ஆவலுடன் எதிர்பார்க்கிறது. பிரதமர் நரேந்திர மோடி மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களுடன் உரையாடுவதையும், மதிப்புமிக்க நுண்ணறிவுகளையும் ஊக்கத் தையும் பகிர்ந்து கொள்வதையும் காணும் வாய்ப்பு கூடுதல் உற்சாகத்தை சேர்க் கிறது.

தேர்வுக்கு தயா ராகும் சவால்களை நிவர்த்தி செய்வது மட்டுமல்லாமல், தனிநபர்கள் தங்கள் கல்விப் பயணத்தில் ஊக்கமும் அதிகார மும் பெறும் ஒரு நிகழ்வில் பங்கேற்பதற்கான ஒரு கூட்டு ஆர்வம் இது.

தேர்வு குறித்த உரையாடல் நிகழ்ச்சிக்கான நாட்கள் நெருங்க நெருங்க அது நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் நமது மாணவர்களுக்கு நேர்மறையான மற்றும் ஆதரவான சூழலை உருவாக்குவதற்கான அடையாளமாக மாறியுள்ளது.

நாடு ஒரு வளமான அனுபவத் திற்கு தயாராக உள்ளது, இந்தத் தனித்துவமான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் கலந்துரையாடலில் வெளிப்படும் ஞானம் மற்றும் உந்துதலை மாணவர் சமுதாயம் ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in