Published : 08 Feb 2018 07:07 AM
Last Updated : 08 Feb 2018 07:07 AM

இந்திய முஸ்லிம்கள் வெளியேற வேண்டும்: பாஜக எம்.பி.யின் பேச்சால் சர்ச்சை

இந்தியாவிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற வேண்டும் என்று பாஜக எம்.பி. வினய் கட்டியார் தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

இந்தியாவை முஸ்லிம்கள் மத ரீதியாகவும், அவர்களின் மக்கள் தொகை மூலமாகவும் பிளவு படுத்தி வருகின்றனர். இனிமேலும் அவர்கள் இந்தியாவில் வசிக்கக் கூடாது. முஸ்லிம்களுக்கென தனி எல்லைகள் கொடுக்கப்பட்டுவிட்டன. அப்படியிருக்கையில், இந்தியாவில் எதற்காக அவர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் இந்தியாவிலிருந்து வெளியேறி பாகிஸ்தானுக்கோ அல்லது வங்கதேசத்துக்கோ செல்ல வேண்டும். அதேபோல், இந்தியாவில் ‘வந்தே மாதரம்’ சொல்லுக்கு மரியாதை கொடுக்காதவர்களுக்கும், தேசியக் கொடியை அவமதிப்பவர்களுக்கும் தண்டனை விதிக்கும் வகையில் சட்டமியற்ற வேண்டும். இவ்வாறு வினய் கட்டியார் தெரிவித்தார்.

இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, தாஜ்மஹால் விரைவில் இந்து கோயிலாக மாறும் என அவர் தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத் தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x