Last Updated : 16 Feb, 2018 02:16 PM

 

Published : 16 Feb 2018 02:16 PM
Last Updated : 16 Feb 2018 02:16 PM

விவசாயிகள் பிரச்சினை; மத்திய அரசை எதிர்த்து மார்ச் 23-ம் தேதி டெல்லியில் போராட்டம்: அன்னா ஹசாரே அறிவிப்பு

பிரதமர் மோடி மீது வைத்திருந்த நம்பிக்கையை அவர் ஏமாற்றிவிட்டதால் மத்திய அரசை எதிர்த்து போராட்டத்தில் இறங்கப்போவதாக பிரபல சமூக ஆர்வலரும் காந்தியவாதியுமான அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் டெஹ்ரி கர்வால் மாவட்டத்தில் சம்பாவில் நேற்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஹசாரே உரையாற்றினார்.

பொதுக்கூட்டத்தில் அவர் பேசிய விவரம் வருமாறு:

''பிரதமர் மோடி ஆரம்பத்தில் நம்பிக்கை தருபவராக இருந்தார். ஆனால் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகான ஆட்சியைப் பார்த்த பிறகு மக்கள் அவர்மீது வைத்த நம்பிக்கை ஏமாற்றத்தையே தந்துள்ளது. இன்று நாடு முழுவதும் விவசாயிகளுக்கு மோசமான நிலை ஏற்படக் காரணம் மத்திய அரசே.

மோடி பிரதமர் பதவிக்கு வந்தபோது, ​​எனக்கு நிறைய நம்பிக்கை இருந்தது. இனி நாட்டு மக்களுக்கு நல்லகாலம்தான் என நினைத்தேன், ஆனால் இப்போது நான் ஏமாற்றம் அடைகிறேன், இந்த காரணத்திற்காகவே நான் விரைவில், மத்திய அரசுக்கு எதிராக ஒரு போராட்டத்தை ஆரம்பித்து உத்தரகாண்டின் ஆதரவைத் தேடுவேன்.

மக்களுக்கான ஒரு திருப்புமுனையை ஏற்படுததுவதற்காக அதற்கான ஒரு காலத்திற்காக அவர் மத்திய அரசை அமைக்க விரும்பினார். அதுவரை அவர் அமைதியானவராகவே இருந்தார். ஆனால் இப்போது, மிகவும் வருத்தமாக உள்ளது. ​​மோடி பதவிக்காலம் கிட்டத்தட்ட மூன்று-நான்காவது ஆண்டு காலம் கடந்து வந்துவிட்டது, இப்போது மக்களிடம் ஏற்பட்டுள்ள ஏமாற்றத்திலிருந்து வெளியேறுவதற்கான போராட்டத்தைத் தொடங்குவதற்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

விவசாயிகள் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும். ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் வரிசையில் விவசாயிகளுக்கும். 5,000 ரூபாய் ஓய்வூதியம் தரப்படவேண்டும். இது போன்ற பிரச்சினைகளுக்கு, மார்ச் 23-ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நான் போராட்டத்தை ஆரம்பிக்க உள்ளேன்''.

இவ்வாறு அன்னா ஹசாரே பேசினார்.

சமீப ஆண்டுகளாக மத்திய அரசை எதிர்த்து எந்த ஒரு போராட்டமும் நடத்தாத நிலையில், உத்தரகாண்ட் மாநிலம், சம்பா நகரில், வி.சி. காபர் சிங் நேகி சதுக்கத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 80 வயது காந்தியவாதி அன்னா ஹசாரே தனது அடுத்தகட்டப் போராட்டத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x