Published : 27 Feb 2018 09:09 AM
Last Updated : 27 Feb 2018 09:09 AM

‘ஜூராசிக் பார்க்’ வாய்ப்பை மறுத்த ஸ்ரீதேவி

தன்னை தேடி வந்த ‘ஜூராசிக் பார்க்’ ஹாலிவுட் பட வாய்ப்பை நடிகை ஸ்ரீதேவி ஏற்க மறுத்துவிட்டார்.

ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநரான ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ‘ஜூராசிக் பார்க்’ கடந்த 1994-ம் ஆண்டில் வெளியானது. இதன் அடுத்தடுத்த பாகங்கள் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன. அத்துடன் வசூலிலும் சாதனை படைத்தன.

இந்த ஹாலிவுட் படத்தில் நடிக்க நடிகை ஸ்ரீதேவியை இயக்குநர் ஸ்பீல்பெர்க் கடந்த 1993-ம் ஆண்டில் அணுகினார். அப்போது இந்தியில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீதேவி இந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார். இதேபோல அவரை திருமணம் செய்து கொள்ள அமெரிக்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர்கள் விருப்பம் தெரிவித்தனர். அவற்றையும் அவர் நிராகரித்துவிட்டார்.

பாலிவுட் உலகில் ஸ்ரீதேவி நுழைந்தபோது அவரால் ஒரு இந்தி வார்த்தை கூட பேச முடியாது. அவருக்காக நடிகை ரேகா உள்ளிட்டோர் குரல் கொடுத்தனர். எனினும் மிக குறுகிய காலத்தில் இந்தியில் புலமை பெற்ற அவர் ‘சாந்தினி’ படத்தில் சொந்த குரலில் பேசினார். கடந்த 1985 முதல் 1992 வரை இந்தி திரையுலகில் அதிகபட்ச சம்பளம் வாங்கிய நடிகை என்ற பெருமையும் அவரையே சேரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x