

கர்நாடகாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் இறந்திருக்கலாம் என மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பாகல் கோட்டை மாவட்டத்தில் உள்ள சுலிகேரி கிராமத்தை சேர்ந்த ஹனுமந்தப்பா ஹட்டி(34).இவரின் 6 வயது மகன் திம்மண்ணா,கடந்த ஞாயிற்றுக்கிழமை 350 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். கடந்த 5 நாள்களாக சிறுவனை மீட்க முடியவில்லை.
பாகல்கோட்டை மாவட்ட மருத்துவ அதிகாரி பி.டி.கித்தூர் கூறும்போது, “உணவு,நீர்,காற்று என எதுவும் இல்லாமல் அவ்வளவு ஆழத்தில் உயிரோடிருப்பது கடினமானது. துர்நாற்றம் வீச ஆரம்பித்திருப்பதனால் சிறுவன் இறந்திருக்க வாய்ப்பிருக்கிறது.''என தெரிவித்தார்.