Last Updated : 23 Jan, 2018 04:10 PM

 

Published : 23 Jan 2018 04:10 PM
Last Updated : 23 Jan 2018 04:10 PM

மத்திய அரசை விமர்சிக்கும் வார்த்தைகளை புறக்கணித்த கேரள ஆளுநர் சதாசிவம்

 

கேரள சட்டசபை கூட்டத்தொடரின் முதல்நாள் உரையின் போது, ஆளுநர் சதாசிவம், மத்திய அரசை விமர்ச்சிக்கும் வார்த்தைகளை வாசிக்காமல் விட்டுச் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சியில் இருக்கிறது.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் போது, வாசிக்காமல் சென்ற மத்திய அரசை விமர்சிக்கும் வார்த்தைகளையும் குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

ஆனால், மத்திய அரசை விமர்சிக்கும் வார்த்தைகளை வாசிக்காமல் புறக்கணித்த ஆளுநர் சதாசிவத்தின் செயல்பாடுகளை கேரள மாநில பா.ஜனதா கட்சி பாராட்டியுள்ளது

கேரள மாநில ஆளுநராக இருக்கும் சதாசிவம் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆவர். தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

. மாநில அரசு தயாரித்துக் கொடுத்த உரையின் நகல் சட்டசபையில் இருந்த எம்.எல்.ஏ.க்கள், ஊடகத்தினர், என அனைவருக்கும் வழங்கப்பட்டு இருந்தது. ஆளுநர் சதாசிவம் அரசின் உரையை தொடர்ந்து படித்து வந்தநிலையில், மத்திய அரசின் செயல்பாடுகளை மட்டும் வாசிக்கவில்லை.

அந்த உரையில், “ மத்திய அரசின் கடுமையான அணுகுமுறை போக்கால், கூட்டுறவு கூட்டாச்சிக்கு அமைதியற்ற சூழல் நிலவுகிறது. மாநில அரசை மீறி மத்திய அரசு தனது பிரதிநிதி மூலம் மாவட்ட அதிகாரிகளையும், உள்ளாட்சி நிர்வாகத்தினருடன் தொடர்பு வைத்து வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதை ஆளுநர் வாசிக்காமல் புறக்கணித்தார்.

இது குறித்து மாநில எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறுகையில், “ ஆளுநர் உரையின்போது அனைவரின் கையிலும் அரசின் கொள்கை குறித்த அச்சிடப்பட்ட உரையின் நகல் இருந்தது. ஆனால், அதில் மத்திய அரசை விமர்சித்து குறிப்பிடப்பட்ட வார்த்தைகளை மட்டும் ஆளுநர் படிக்காமல் புறக்கணித்துவிட்டார். அவர் வாசிக்காத பகுதிகளையும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள அவைத் தலைவரிடம் கடிதம் அளிக்க இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

ஆனால், இது குறித்து நிருபர்களின் கேட்டபோது, முதல்வர் பினராயி விஜயன், “ ஆளுநர் வாசிக்காத அந்த பகுதி குறித்து யாரும் என்னிடம் ஏதும் தெரிவிக்கவில்லை” என்றார்.

இது குறித்து முதல்வர் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், “ ஆளுநர் உரை குறித்த அரசின் கொள்கைகள் குறித்து பொதுவாக யாரும் விமர்சிப்பதில்லை. அது தொடர்பாக யாரும் கருத்தும் கூறுவதில்லை” என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x