Published : 25 Jan 2018 09:55 AM
Last Updated : 25 Jan 2018 09:55 AM
திரிபுரா மாநில சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 18-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
60 உறுப்பினர்கள் கொண்ட திரிபுரா மாநில சட்டப் பேரவையின் காலம் வரும் பிப்ரவரியில் முடிகிறது. இதையடுத்து திரிபுரா மாநில சட்டப் பேரவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த 18-ம் தேதி அறிவித்துவிட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தை நெறி முறைகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்த நிலையில் தேர்தல் அறிவிக்கையை, திரிபுரா மாநில தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
தேர்தலில் போட்டியிட வேட்பு மனுக்களை ஜனவரி 31 வரை வேட்பாளர்கள் தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை பிப்ரவரி 1-ம் தேதி நடைபெறும். மனுக்களை வாபஸ் பெறுவதற்கு பிப்ரவரி 3-ம் தேதி கடைசி நாளாகும்.
திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. திரிபுராவுடன் மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களுக்கும் பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். - ஐஏஎன்எஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT