Published : 03 Jan 2018 10:24 AM
Last Updated : 03 Jan 2018 10:24 AM
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் திரிகுடா மலையில் அமைந்துள்ள குகை கோயிலான புகழ்பெற்ற வைஷ்ணோ தேவி கோயிலுக்கு கடந்த ஆண்டில் 81.78 லட்சம் பக்தர்கள் வருகை புரிந்தனர்.
இதுகுறித்து வைஷ்ணோ தேவி கோயில் வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “2017-ல் மட்டும் 81,78,318 பக்தர்கள் கோயிலுக்கு வந்து வைஷ்ணோ தேவியை வழிபட்டனர். 2016-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 4.54 லட்சம் அதிகமாகும். புத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் மாநில ஆளுநரும் மாதா வைஷ்ணோ தேவி கோயில் வாரியத்தின் தலைவருமான என்.என்.வோரா, தனது மனைவி உஷாவுடன் கோயிலுக்கு வந்தார். அப்போது கேபிள் கார் திட்டத்தை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT