Published : 16 Jan 2018 09:32 AM
Last Updated : 16 Jan 2018 09:32 AM

சுப்ரபாத சேவை மீண்டும் தொடங்கியது

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திருப்பாவை சேவை நிறைவடைந்ததையொட்டி நேற்று முதல் சுப்ரபாத சேவை மீண்டும் தொடங்கியது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி முழுவதும் சுப்ரபாத சேவை நிறுத்தப்பட்டு, அதற்கு பதிலாக ஆண்டாள் அருளிய திருப்பாவை சேவையை நடத்துவது ஐதீகம். அதிகாலை பெருமாளை துயில் எழுப்பும் விதமாக இந்த சேவை கடந்த 30 நாட்களும் நடந்தது. இதனை தொடர்ந்து மார்கழி மாதம் 14-ம் தேதியுடன் நிறைவடைந்ததால் வழக்கம்போல் சுப்ரபாத சேவை நேற்று முதல் தொடங்கப்பட்டது.

பொங்கல் பண்டிகைக்கான தொடர் விடுமுறையையொட்டி, திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் நேற்று ஏழுமலையானை தரிசனம் செய்ய சர்வ தரிசன வரிசையில் 14 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். திவ்ய தரிசனம் மூலம் 2 மணி நேரமும், ரூ. 300 சிறப்பு கட்டண தரிசனம் மூலம் 3 மணி நேரமும் பக்தர்கள் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x