Published : 18 Jan 2018 01:25 PM
Last Updated : 18 Jan 2018 01:25 PM
குஜராத் கடல் பகுதியில், கச்சா எண்ணெய் கப்பல் பற்றி எரியும் நிலையில் அதனை அணைக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குஜராத் மாநிலம் காண்ட்லா துறைமுகம் அருகே கடல் பகுதியில் கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்றில் நேற்று திடீரென தீ பிடித்தது. அந்த கப்பலில் 30 ஆயிரம் டன்கள் டீசல் உள்ளது. உடனடியாக கடலோரா காவல்படை கப்பல் அங்கு விரைந்தது. கப்பலில் இருந்த 26 பணியாளர்களும் உடனடியாக மீட்கப்பட்டனர்.
அவர்களில் இருவர் தீக்காயம் ஏற்பட்ட நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கப்பல் தொடர்ந்து தீ பிடித்து எரியும் நிலையில் அதனை அணைக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடலோர காவல்படை கப்பலுடன், எஸ்ஸார், ரிலையன்ஸ், அதானி நிறுவன கப்பல்களும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடபட்டுள்ளன. கப்பலில் உள்ள டீசல் கடலில் பரவாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT