Published : 11 Jan 2018 10:10 AM
Last Updated : 11 Jan 2018 10:10 AM
எம்.பி., எம்எல்ஏக்கள் வழக்கறிஞர் தொழில் செய்வதற்கு எதிரான மனு மீது பதிலளிக்குமாறு வழக்கறிஞர்களாக இருக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இந்திய பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்திய பார் கவுன்சிலில் டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் அஷ்வினி குமார் உபாத்யாயா மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘‘தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான எம்.பி., எம்எல்ஏக்களும் அரசு ஊழியர்கள்தான். அரசு ஊழியர்கள் வழக்கறிஞர்களாக பணியாற்றக்கூடாது என்று விதிமுறை உள்ளது. ஆனால், பல எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் வழக்கறிஞர்களாக தொழில் செய்கின்றனர். இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எம்.பி., எம்எல்ஏக்கள் வழக்கறிஞராக பணியாற்ற தடை விதிக்க வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.
இதுகுறித்து, இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா கூறுகையில், ‘‘பார் கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்ட மனு அடிப்படையில் வழக்கறிஞர்களாக பணியாற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒரு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT