Published : 30 Jan 2018 10:40 AM
Last Updated : 30 Jan 2018 10:40 AM

நாகாலாந்தில் தேர்தலில் போட்டியில்லை: காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட 11 கட்சிகள் அறிவிப்பு

நாகாலாந்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட 11 கட்சிகள் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளன.

நாகாலாந்து பேரவைக்கு பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனிடையே அந்த மாநிலத்தைச் சேர்ந்த 11 கட்சிகள் தேர்தலில் போட்டியிடமாட்டோம் என்று அறிவித்துள்ளன. நாகாலாந்தை ஆளும் கட்சியான நாகா மக்கள் முன்னணி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் இவ்வாறு அறிவித்திருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்குள்ள பழங்குடி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாதது, அரசியல் பிரச்சினைகளை தீர்க்காதது உள்ளிட்டவை இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

நாகாலாந்து ஹோஹோ பழங்குடி மக்கள் அமைப்பு மற்றும் சிவில் சங்கங்கள் இணைந்த (சிசிஎன்டிஎச்சிஓ) அமைப்பு நேற்று ஒரு கூட்டத்தை கூட்டியிருந்தது. இந்தக் கூட்டத்தில் 11 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதில் நாகா அரசியல் பிரச்சினையை முதலில் தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்ற 11 கட்சிகள் கூட்டாக அறிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x