Published : 30 Jan 2018 03:37 PM
Last Updated : 30 Jan 2018 03:37 PM
5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் நிரப்பப்படாமல் இருக்கும் அரசு பதவிகளை நீக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அனைத்து அமைச்சகங்களிடம் துறை ரீதியாக முழுமையான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.
இது குறித்து நிதி அமைச்கம் கடந்த 16ம் தேதி அனைத்து அமைச்சகங்களுக்கும் நினைவுக் குறிப்பாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது-
அனைத்து அமைச்சகங்களும் தங்கள் துறைகளில் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் நிரப்பப்படாமல் இருக்கும் பதவிகள் குறித்த அறிக்கையை அளிக்க வேண்டும். அவ்வாறு இருந்தால், அந்த பதவியை நீக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பல அமைச்சகங்கள் நிதி அமைச்சகத்துக்கு முழுமையான அறிக்கையை அனுப்பிவிட்டன. சில அமைச்சகங்கள் முக்கிய தகவல்களுக்காக இன்னும் அறிக்கையை அனுப்பாமல் இருக்கின்றன.
இதையடுத்து அனைத்து மத்திய அமைச்சகங்களின் நிதி ஆலோசகர்கள், இணைச் செயலாளர்கள் தங்கள் துறைகளில் காலியாக இருக்கும் பதவிகள் குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சகமும் தனக்கு கீழ் உள்ள துறைகளில் 5 ஆண்டுகளாக காலியாக இருக்கும் பதவிகள் குறித்து பட்டியலிட கூடுதல் செயலாளர்கள், இணை செயலாளர்கள், நாடாளுமன்ற தலைமை பாதுகாப்பு அதிகாரிகள், உள்ளிட்டவற்றுக்கு உத்தரவிட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT