Published : 30 Jan 2018 08:37 AM
Last Updated : 30 Jan 2018 08:37 AM
குடியரசு தின விழா நிறைவு நிகழ்ச்சியாக, முப்படை வீரர்கள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
4 நாட்கள் நடைபெற்ற குடியரசு தின விழா முடிவுக்கு வந்ததை குறிப்பிடும் விதமாக, டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 29-ம் தேதி முப்படை வீரர்கள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த 1950 முதல் கொண்டாடப்படுகிறது. ராணுவத்தில் மேஜராக பணியாற்றிய ராபர்ட் இந்த நிகழ்ச்சியை பேண்ட் வாத்தியக் கருவிகளின் முழக்கத்துடன் தனித்துவம் மிக்கதாக உருவாக்கினார்.
இந்த ஆண்டுக்கான, ‘முப்படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி’ டெல்லி விஜய் சதுக்கத்தில் நேற்று நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், முப்படை தளபதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் பேண்ட் வாத்தியக் கருவிகள் முழக்கத்துடன் கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT