Published : 27 Jan 2018 09:22 AM
Last Updated : 27 Jan 2018 09:22 AM

ஜாமீனுக்கு ஆதார் கட்டாயம்?: உச்ச நீதிமன்றம் அறிவுரை

ஜாமீன் பெறுவதற்கு ஆதார் கட்டாயம் என்ற உத்தரவை திருத்த சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

சத்தீஸ்கர் சிறைகளில் உள்ள கைதிகள் ஜாமீன் பெறுவதற்கு அவர்களின் ஆதார் எண்ணும் அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் நபர்களின் ஆதார் எண்களும் கட்டாயம் என்று அந்த மாநில உயர் நீதிமன்றம் கடந்த 5-ம் தேதி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து வழக்கறிஞர் பியூஷ் பாட்டியா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியபோது, அடுத்த 10 நாட்களுக்குள் ஆதார் கட்டாயம் உத்தரவை சட்ட விதிகளுக்கு உட்பட்டு திருத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

ஆதார் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x