Published : 20 Nov 2023 05:45 PM
Last Updated : 20 Nov 2023 05:45 PM
தமிழக ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், உச்ச நீதிமன்ற நோட்டீஸுக்குப் பின்னரே தன் வசம் தேங்கிக் கிடந்த மசோதாக்களை ஆளுநர் ரவி திருப்பி அனுப்புகிறார் என்றால், கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்று காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடர்பான விசாரணையின்போது, “ஆளுநர் ரவி தரப்பில் நவம்பர் 13-ஆம் தேதி அவர் மசோதாக்களை மாநில அரசுக்கு திருப்பியனுப்பிவிட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது. நாங்கள் இவ்வழக்கில் எங்கள் கருத்தை முன்வைத்தது நவம்பர் 10-ல். அதன் பின்னர் மூன்றே நாட்களில் ஆளுநர் மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ளார். ஆனால், இந்த மசோதாக்கள் 2020-ல் இருந்தே கிடப்பில் உள்ளன. அப்படியென்றால் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிய பின்னர் ஆளுநர் முடிவெடுத்திருக்கிறார். மூன்றாண்டுகளாக அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நாடும் வரை ஏன் ஆளுநர்கள் காத்திருக்க வேண்டும்?” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வினவினர்
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT