Published : 08 Jan 2018 09:27 AM
Last Updated : 08 Jan 2018 09:27 AM

தீவிரவாதத்துக்கு பாகிஸ்தான் ஆதரவு: அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

மாநில போலீஸ் டிஜிபிக்களின் வருடாந்திர மாநாடு மத்திய பிரதேசத்தின் டேக்கன்பூரில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. இதில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் தீவிரவாத பயிற்சி முகாம்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. தீவிரவாதிகளுக்கு தேவையான நிதியுதவி, தொலைத்தொடர்பு வசதிகளை அந்த நாடு செய்து கொடுக்கிறது. காஷ்மீர் இளைஞர்களை தீவிரவாத பாதைக்கு இழுக்கிறது. பிரிவினைவாத அமைப்புகளை ஆதரிக்கிறது. எனினும் ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒழிப்பதில் பாதுகாப்புப் படைகள் திறம்பட செயல்படுகின்றன.

நாடு முழுவதும் நக்ஸல் தாக்குதல்கள் குறைந்துள்ளன. எனினும் மியான்மரில் இருந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத குழுக்கள் அச்சுறுத்தலாக உள்ளன. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மத கலவரம், வன்முறைக்கு எதிராக காவல் துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x