Published : 13 Jan 2018 06:02 PM
Last Updated : 13 Jan 2018 06:02 PM
மும்பையின் புறநகர் பகுதியில் இன்று காலை சிறுத்தை புகுந்து தாக்கியதில் ஆறு பேர் காயமடைந்தனர்.
மும்பையின் புறநகர் பகுதியான முலுந்த் மலை மற்றும் வனப்பகுதிகள் சூழ்ந்த இடம். இங்குள்ள நனிபடா குடியிருப்பு பகுதியில் இன்று காலை 7.15 மணியளவில் திடீரென சிறுத்தை ஒன்று புகுந்தது. அங்கிருந்த சிலரை தாக்கத் தொடங்கியது. மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
உடனடியாக காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்தனர். அந்த பகுதியை சுற்றி வளைத்து, பாதுகாப்பு அரண்களை ஏற்படுத்தினர். பின்னர் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தை பிடிக்கப்பட்டது. சிறுத்தை தாக்கியதில் ஆறு பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT