Published : 22 Jan 2018 08:11 PM
Last Updated : 22 Jan 2018 08:11 PM
மத்திய அமைச்சராக நீடிக்க அனந்த குமார் ஹெக்டேவுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று தலித் அமைப்பின் தலைவரும் குஜராத் எம்.எல்.ஏ.வும் ஆன ஜிக்னேஷ் மேவானி கேள்வி எழுப்பியுள்ளார்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேட்சையாக பாஜக வை எதிர்த்து போட்டியிட்ட தலித் அமைப்பின் தலைவர் ஜிக்னேஷ் மேவானி வெற்றி பெற்றார். பா.ஜனதா அரசின் தலித் விரோத போக்கையும், பிரதமர் மோடியையும், கட்சித் தலைவர்களின் செயல்பாட்டையும் மேவானி கடுமையாக விமர்ச்சித்து வருகிறார்.
கர்நாடகவில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய திறன் மேம்பாட்டுத்துறையின் அமைச்சர் அனந்த குமார் ஹெக்டே, தலித்களை நாயுடன் ஒப்பிட்டு பேசி இருந்தார்.
இதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கூட கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். மேலும், கர்நாடக மாநிலத்தில் அமைச்சர் அனந்த குமாருக்கு எதிராக கண்டன போராட்டங்களும், ஆர்பாட்டங்களும் நடந்தன.
ஆனால், அமைச்சர் அனந்த குமார் ஹெக்டே, தான் அவ்வாறு பேசவில்லை, தனது கருத்து தவறாக புனையப்பட்டுவிட்டது என்று விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் தலித் அமைப்பின் தலைவரும், குஜராத் சுயேட்சே எம்.எல்.ஏ.வும் ஆன ஜிக்னேஷ் மேவானி ட்விட்டரில் பிரதமர் மோடிக்கு கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். அவரின் பதிவில் கூறியிருப்பதாவது:
அன்புள்ள நரேந்திர மோடிக்கு, அனந்த குமார் ஹெக்டேயிடம் என்ன விதமான தகுதியையும், திறமையையும் நீங்கள் கண்டீர்கள்?, எப்படி அவரை திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சராக நியமித்து முடிவு எடுத்தீர்கள்?. ஹெக்டே கண்டிப்பாக பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT