Published : 21 Jan 2018 09:07 AM
Last Updated : 21 Jan 2018 09:07 AM
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளை மத்திய அரசு தேசிய விடுமுறை தினங்களாக அறிவிக்கவேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது:
சுவாமி விவேகானந்தரும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸும் தேசிய, சர்வதேச சின்னங்களாகத் திகழ்ந்து வருகின்றனர். அவர்களது பிறந்த நாள்களை தேசிய விடுமுறை தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ஜனவரி 12-ம் தேதி விவேகானந்தர் பிறந்தநாளும், ஜனவரி 23-ம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளும் கொண்டாடப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT