Last Updated : 31 Jan, 2018 11:07 AM

 

Published : 31 Jan 2018 11:07 AM
Last Updated : 31 Jan 2018 11:07 AM

இந்திய கடற்படையின் புதிய நீர்மூழ்கிக் கப்பல் கராஞ்ச் அறிமுகம்

இந்தியக் கடற்படையின் மூன்றாவது ஸ்கிராபென் வகுப்பு வகையின் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றான 'கராஞ்ச்' இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

கடற்படைத் தலைவர் அட்மிரல் சுனில் லன்பாவின் மனைவி ரீனா லன்பா இந்த நீர்மூழ்கிக் கப்பலைத் தொடங்கி வைத்தார். இந் நீர்மூழ்கிக் கப்பலை மஸாகான் டக் லிமிடெட் (எம்டிஎல்) தயாரித்துள்ளது.

இந்நிகழ்வில் பங்கேற்ற அட்மிரல் லன்பா பேசுகையில், "இது (நீர்மூழ்கிக் கப்பல்) முறையாக தனது பணியில் ஈடுபடுவதற்கு முன் அடுத்த ஆண்டில் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்'' என்றார்.

மஸாகான் டக் லிமிடெட் சார்பாக மேலும் ஆறு நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டப்பட உள்ளன. இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் அனைத்தும் பிரஞ்சு கடற்படையின் கப்பல் கட்டும் குழுவுடன் இணைந்து கட்டப்படுகின்றன.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த கடந்த மாதம் ஆறு இந்திய ஸ்கோர்பேன் வகை நீர்மூழ்கிக் கப்பல்களை இந்தியக் கடற்படையில் இணைத்தார். அப்போது அவர் கூறுகையில், ''இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் நாட்டின் பாதுகாப்பை தயார்நிலையில் வைத்திருப்பதற்கான தூண்டுகோலின் ஒரு பெரிய படி'' என்றார்.

''இவ்வகையான நீர்மூழ்கிக் கப்பல்கள், தங்கள் தொழில்துறை திறன் கொண்டதாக இருக்கும் சில நாடுகளில் மட்டும் தயாரிக்கப்படுகின்றன. மிகவும் நுட்பமான மற்றும் துல்லியமான கைவினைக் கருவியாக இது தயாரிக்கப்பட்டுள்ளது'' என்று பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x