Published : 22 Jan 2018 05:22 PM
Last Updated : 22 Jan 2018 05:22 PM
டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் 20 துப்பாக்கித் தோட்டாக்களுடன் வந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
இந்தப் பெண் உத்தரப் பிரதேச மாநில மொராதாபாத்திலிருந்து வந்தவர். ஞாயிறு மாலை ஆதர்ஷ் நகர் ரயில் நிலைய சி.எஸ்.ஐ.எஃப் அதிகாரிகள் பெண்ணின் பையை ஸ்கேன் செய்த போது அதில் 20 தோட்டாக்கள் இருந்ததைக் கண்டு அதிர்ந்தனர்.
இத்தனைக்கும் இந்தப் பெண் தன் தந்தை மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுடன் பயணித்துள்ளார். தந்தை தனது ஆயுத உரிமத்தைக் காட்டி இந்த 20 தோட்டாக்கள் தன்னுடையது என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்தப் பெண் மற்றும் இவருடன் வந்தவர்களை டெல்லி போலீஸாரிடம் மேல் விசாரணைக்காக ஒப்படைத்தனர் சி.எஸ்.ஐ.எஃப். அதிகாரிகள்.
வரும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் பிற பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT