பிரதமர் மோடி
பிரதமர் மோடி

காசா மருத்துவமனை தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது: பிரதமர் மோடி கவலை

Published on

புதுடெல்லி: காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அறிந்துமிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள் ளதாவது:

காசாவில் உள்ள அல் அஹ்லிமருத்துவமனை மீது நடத்தப்பட்டதாக்குதல், அதில் ஏராளமானோர் உயிரிழந்ததை அறிந்துநான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இந்த துயரத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திக் கிறேன். இஸ்ரேல், ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே நடந்து கொண்டிருக்கும் இந்த மோதலில்தொடர்ச்சியாக பொதுமக்கள்உயிரிழப்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. மருத்துவமனை மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு சம்பந்தப்பட்டவர்களே அதற்கு பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதனிடையே மருத்துவமனை மீதான தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மறுத்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in