Published : 20 Jan 2018 09:34 AM
Last Updated : 20 Jan 2018 09:34 AM
அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களுடன் இரவு விருந்தில் பங்கேற்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவர்களுடன் உற்சாகமாக செல்பி எடுத்துக் கொண்டார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தியாவில் 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பிரதமர் மோடியை சந்தித்து பேசிய அவர், நாட்டின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு வருகிறார். அந்த வகையில், மும்பையில் பாலிவுட் நட்சத்திரங்களுடன் இரவு விருந்து நிகழ்ச்சியில் தனது மனைவி சாராவுடன் பெஞ்சமின் நெதன்யாகு கலந்துகொண்டார். நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், விவேக் ஒபராய், சாரா அலி கான், இயக்குநர்கள் கரன் ஜோகார், சுபாஷ் காய், இம்தியாஸ் அலி உள்ளிட்டோர் இந்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அவர்களுடன் உற்சாகமாக உரையாடிய பெஞ்சமின், தாம் பாலிவுட் திரைப்படங்களை மிகவும் நேசிப்பதாக தெரிவித்தார். தான் மட்டுமின்றி ஒட்டுமொத்த இஸ்ரேல் மக்களும் பாலிவுட்டை நேசிப்பதாகவும் அப்போது அவர் கூறினார். இதையடுத்து, பாலிவுட் நட்சந்திரங்களுடன் தமது மனைவி சாராவுடன் நெதன்யாகு செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT